Skip to main content

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்


அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் ஏசுவைத் துதியுங்கள்
ராஜாதி ராஜனாம் ஏசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா, அல்லேலூயா, தேவனைத் துதியுங்கள்

தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத் தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் ஏசுவைத் துதியுங்கள் - ராஜாதி

சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் - துதியுங்கள்
அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் . . .ராஜாதி

பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் - துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை ஏசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் . . . ராஜாதி

ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலையலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை பரிசுத்தர்கள் நிரப்புவார் துதியுங்கள் . . . ராஜாதி