Skip to main content

அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே பாத்திரர் இயேசு நாதர் புகழையே போற்றிப்பாடிடு


அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே பாத்திரர்
இயேசு நாதர் புகழையே போற்றிப்பாடிடு
பாடிடு பாடிடு இயேசு ராஜன் புகழ்பாடிடு
அல்லேலூயா

தாழ்வில் நம்மை நினைத்தார் வாழ்விற்கு
வழிதனை திறந்து தந்தார்
கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்
காலமெல்லாம் அவல் புகழைப் போற்றிப் பாடிடு - அல்லேலூயா

தூதர்கள் போற்றும் தேவன் துதிகளிலே
வாசம் செய்யும் தூய நேசன்
மாந்தர்கள் உள்ளத்தில் வேந்தனாய் வாழ்த்திப் பாடிடு
மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு - அல்லேலூயா

சேதம் இன்றி காத்தார்
தாங்கி ஏந்தி சுமந்து தரப்பலித்தார்
அன்பின் தேவனை ஆத்தும நேசரே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு - அல்லேலூயா