Skip to main content

ஏதேனில் ஆதி மனம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே


ஏதேனில் ஆதி மனம் உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார், மும்முறை வாழ்த்துண்டாம்

ஆதாமுக்கு ஏவாளைக் கொடுத்த பிதாவே!
இம்மாப்பிள்ளைக்கு பெண்ணைக் கொடுக்க வாருமே

இரு தன்மையும் சேர்ந்த கன்னியின் மைந்தனே!
இவர்கள் இருகையும் இணைக்க வாருமே

மெய் மணவாளனான தேவ குமாரர்க்கே
சபையாம் மணையானை ஜோடிக்கும் ஆவியே

நீரும் இந்நாளில் வந்து-இவ்விரு வரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி-மெய்ப்பாக்கியம் ஈந்திடும்