Skip to main content

பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;


பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும்,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்

எந்த கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்,
பாவம் நீங்கமாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே

யாது மற்ற ஏழை நான்,
நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே,
தூய ஊற்றை அண்டினேன்
தூய்மையாக்கேல் மாளுவேன்

நிழல் போன்ற வாழ்விலே,
கண்ணை மூடும் சாவிலே,
கண்ணுக் கெட்டா லோகத்தில்,
நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே