Skip to main content

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர்,


ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்,
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண் ஜோதி கண்டனர்

அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன்; "திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிÞது நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்"

என்றுரைத்தான்; அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

மா உன்னதத்தில் ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கும் ஈகுவீர்.