Skip to main content

யோர்தான் நதியோரம் திகையாதே மனமே யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே


யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே

வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே - யோர்

வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே - யோர்

உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே - யோர்

கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே - யோர்

பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே - யோர்

ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வÞதிரம் தரித்திடலாமே - யோர்