Skip to main content

ஸ்தோத்திர துதி மகிமை எந்நாளும் என் கர்த்தருக்கே


ஸ்தோத்திர துதி மகிமை
எந்நாளும் என் கர்த்தருக்கே
ஆவியினால் நல் கருத்துடனே
என் ஆண்டவரைப் பாடுவேன்

புது ஜீவன் புது பெலன் புது கிருபை
புதிய நல் ஆவியும் அளித்தாரே
பழையவைகள் ஒழிந்தனவே
புதுமையாய் மாற்றினாரே - ஸ்தோத்திர

கண்களும் கர்த்தரை நோக்கிடவே
பரத்தின் ஒத்தாசை அளித்தாரே
இராப்பகலாய் கண்ணுறங்காமல்
காத்திடுமி கர்த்தரவர் - ஸ்தோத்திர

நன்மையும் கிருபையும் தொடர்ந்திடவே
நீதியின் பாதையில் நடத்தினாரே
புது எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பச் செய்தார் - ஸ்தோத்திர

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
நன்றியினால் உள்ளம் நிறைந்திடுதே
ஜீவன் என்னில் நிலைத்திருக்கும் வரை
என் தேவனைத் துதித்திடுவேன் - ஸ்தோத்திர