Skip to main content

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும்


அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற் பேறானீரும்
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாமும் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போÞதலரை - என்

முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேறாய் நீர் இருக்க
ஆவியல் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர - என்

வருங்காலங்களில் முதற்பேறாய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிலுஷ்டியிலே - என்

நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுமே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
இம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னைத் தந்தேன் நடத்திடுமே - என்