Skip to main content

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! அணைத்தீரரசே... அருளாலே


அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ!
அணைத்தீரரசே... அருளாலே

நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசமணுகாமல் பாதுகாத்ணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே - அன்பிதோ

சுத்த ஜலத்தினால் சுத்திகரித்து என்னை தமக்காய்
மீறிப் போகும் எந்தன் சிந்தை அகற்றிதம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே - அன்பிதோ

தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்து
தூய கீதமுடன் தூயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே - அன்பிதோ

உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும் - அன்பிதோ