Skip to main content

அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே


அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பரே
மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே - ஆ - அடைக்கலமே

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே - ஆ - அடைக்கலமே

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுமே -ஆ- அடைக்கலமே

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே - ஆ - அடைக்கலமே

பாவங்களை பாராதென்னை பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்க செய்தீரே - ஆ - அடைக்கலமே