Skip to main content

ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ? ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ?


ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?
ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ?
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனே பெற்றுக் கொள்வானே -நம்மிலே

மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்!
திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்ததெவ்வாறு
பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டால் -நம்மிலே

சாத்தராக், மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு
ஜீவனை பணயம் வைத்து தீக்குள் சென்றதால்!
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் -நம்மிலே

பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்
உலகத்தையும், மேன்மையையும் உதறி தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்துச் சுகித்திருக்கணும் - நம்மிலே

வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளை வெளுத்து தோய்த்தவர்
ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து
வெற்றிக் கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் - நம்மிலே