Skip to main content

ஜெபிக்கும் வாஞ்சை எனக்கு தாரும் தேவா


ஜெபிக்கும் வாஞ்சை
எனக்கு தாரும் தேவா
விண்ணப்ப ஆவியால்
என்னை நிரப்பும் தேவா

கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
காலம் நேரம் மறந்து உந்தன்
சமூகத்தில் ஜெபிக்க
கிருபை தாருமே (2)

பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
பாரத்தோடு ஜெபிக்க
கிருபை தாருமே (2)

உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
இதயம் நொருங்கி பெறு மூச்சோடு
ஊக்கமாய் ஜெபிக்க
கிருபை தாருமே (2)