Skip to main content

ஜீவ நதியின் நீரோடைப் போல் கல்வாரியின் இரத்தம் பாய்ந்தோடுதே


ஜீவ நதியின் நீரோடைப் போல்
கல்வாரியின் இரத்தம் பாய்ந்தோடுதே
என் இயேசுவே உம் தயவால்
என் வாழ்வில் என்றும் அமைதியே

கர்த்தர் என் பெலனும் கேடகமாய்
கருத்துடன் காத்திட அழைத்ததால்
கண்ணீர் கவலை நீங்கிடவே
களிப்பின் ஊற்றாய் மாற்றினீரே - ஜீவ

இயேசுவின் கரத்தின் கருவியாய்
நன்மை செய்ய அழைத்ததால்
வழுவாத வல்லமை வசனங்களை
வானவர் தந்து மாற்றினீரே - ஜீவ

சிலுவை சிந்தனை ஞானமாய்
சிறந்து விளங்க அழைத்ததால்
பழுதில்லாத உம் பலன்களை
பரத்தில் சேர்க்க மாற்றினீரே - ஜீவ

சபையின் மேன்மை சாட்சியாய்
சத்தியம் சொல்ல அழைத்ததால்
சந்தோஷ நதியின் வாழ்க்கையை
நாடெங்கும் பரப்ப மாற்றினீரே - ஜீவ

சீயோனின் சிறந்த சிகரமாய்
செழித்து வளர அழைத்ததால்
எக்காளம் தொனிக்கும் நேரத்தில்
மறுரூபம் ஆக மாற்றுவீரே - ஜீவ