Skip to main content

அன்பே கல்வாரி அன்பே உம்மை பார்க்கையிலே


அன்பே கல்வாரி அன்பே
உம்மை பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் - எங்கள்
பரிகார பலியானீர்

காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதைய்யா

நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதய்யா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே