Skip to main content

நன்றியால் துதிபாடு உன் இயேசுவை உள்ளத்தால் என்றும் பாடு


நன்றியால் துதிபாடு உன் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்.

எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் - நன்றியால்

துன்மார்க்க ஏதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடே என்றுமே
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு - நன்றியால்

சரீரம், ஆத்துமா, ஆவியிலும்
சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் - நன்றியால்