Skip to main content

நம்பியே வா நடத்துவார் நாதன் அழைப்பு பெரியது


நம்பியே வா நடத்துவார்
நாதன் அழைப்பு பெரியது
வழி விலகாதே பாதை தவறாதே
வழி என்றும் காட்டிடுவார்
போற்றுவேன் துதிப்பேன்
புகழ்ந்து பாடிடுவேன்
பாரில் இயேசென்னை நேசிப்பதால்
அவரைப் போற்றுவேன்

கர்த்தர் பாதை இருளல்ல
அவர் வசனம் வெளிச்சமே
அவர் கிருபை என்றும் புதியது
ஆறுதல் தந்திடுமே - போற்று

ஆத்துமாவே கலங்காதே
ஆண்டவரை நீ துதித்திடுவாய்
காலைத் தீமைக்கு விலக்கியே
காத்துன்னை இரட்சிப்பதால் - போற்று