Skip to main content

நானே மெய் தேவனாம் மகிமை அருளி செய்வேன்


நானே மெய் தேவனாம்
மகிமை அருளி செய்வேன்
சீயோன் களிப்பாய்
எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்

தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்
சுமந்துமே காத்திடுவேன்
நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்
துணையே எந்நாளுமே அல்லேலூயா -2 - நானே

எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே
எனக்கென்றும் செவிகொடுப்பாய்
உன்னை உயர்த்துவேன்
மேன்மைப்படுத்துவேன் - 2 - நானே

எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்
விடுதலை அளித்திடுவேன்
மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை
களிப்பாய் எந்நாளுமே - அல்லே - 2 - நானே