Skip to main content

நான் உம்மைப் பற்றி ரட்சகா வீண் வெட்கம் அடையேன்


நான் உம்மைப் பற்றி ரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்
பல்லவி
சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் அடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேளையில்
காப்பீர் தேவாவியால் - சிலுவை

மா வல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர் - சிலுவை

நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசÞதலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்யம் அடைவேன் - சிலுவை