Skip to main content

நேசர் இயேசுவின் மார்பிலே சாய்ந்திருந்தால் பேரின்பமே


நேசர் இயேசுவின் மார்பிலே
சாய்ந்திருந்தால் பேரின்பமே

அனுபல்லவி
மகிமையின் சாயலாய் மறுரூபமாகி
மகிழ்வினால் உள்ளம் பூரிக்குதே

ஆவியின் அருளே பொழிந்திடுதே
அன்பினால் இருதயம் நிம்பிடவே
அண்ணலின் கரமே அணைத்திடுதே
ஆறுதல் தேறுதல் பெருகிடுதே - நேசர்

தூயனாய் என்னையே பிரித்தெடுத்த
நேசரின் அன்பை நினைத்திடவே
உள்ளத்தில் உவகை உயர்ந்திடுதே
உன்னத பாடலே பிறந்திடுதே - நேசர்

தேவனின் சாயல் தரித்திடவே
வல்லமை விசுவாசம் பெருகிடுதே
சத்தியம் கிருபை இணைந்தென்றுமே
நித்திய நம்பிக்கை அளித்திடுதே - நேசர்