Skip to main content

நீங்காத பாவம் நீங்காததேனோ நீங்கிடும் நாள் தான் இதோ


நீங்காத பாவம் நீங்காததேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒரு போதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார் - நீங்காத

நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார் - நீங்காத