Skip to main content

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை


நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னை காண்கின்ற தேவன்
கண்மணிபோல் உன்னை காப்பேன்

பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் - நான்

திகையாதே கலங்காதே மனமே நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன் - நான்

அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
அளித்திடும் லெனைப் பெற்றிடுவாய்
அத்திமரம்போல் செழித்திடுவாய் - நான்
ஆசையாய் உன்ன கனி கொடுப்பாய் - நான்

நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் - தினம்
ஆல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் - நான்