Skip to main content

நான் பிரமித்து நின்று பேரன்பின் பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்


நான் பிரமித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்
மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் ரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்

முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் - மாதூய

தம் கரத்தை என் மீதில் வைத்து
"நீ சொÞதமாவாய்" என்றனர்
நான் அவரின் வÞதிரம் தொட
ஆரோக்கியம் அருளினார் - மாதூய

என்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரினில் வீசச் செய்வார் - மாதூய