Skip to main content

நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார்


நித்தியானந்த கர்த்தர் இயேசுவே
நித்தமும் பிரகாசிக்கின்றார்
பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள்
பரிசுத்தமுடன் மின்னுதே
சீnhயனிலே சுவிஷேக
ஜெப ஐக்கிமே காணுவோம்
ஜெயங்கொண்டோராய்
ஜெப வீரராய்
சிலுவை யாத்திரை செல்லுவோம்

சிறு மந்தையின் பெரிய மேய்ப்பன்
நெருங்கி வந்து நிற்பார்
சின்னவன் ஆயிரம் பதினாயிரம்
சேனைத் திரளாய் மாறுவான் -சீயோனிலே

உலகமெங்கும் சுவிசேஷத்தின்
உயர்ந்த கொடி பறக்கும்
திறந்த வாசலுள் பிரவேசித்து
சிறந்த சேவை செய்குவோம் -சீயோனிலே

நரக வழி செல்லும் மாந்தருக்காய்
நடு இராப்பகல் அழுதே
நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
நனைந்து வருந்தி ஜெபிப்போம் -சீயோனிலே

அவமானங்கள் பரிகாசங்கள்
அடைந்தாலும் நாம் உழைப்போம்
ஆத்தும பாரமும் பிரயாசமும்
ஆல்லும் பகலும் நாடுவோம் -சீயோனிலே

எதிராளிகள் எதிரே பந்தி
எமக்காயத்தப்படுத்தி
எம்தலை எண்ணெயால் அபிஷேகித்தார்
எருகோ மதிலும் வீழ்ந்திடும் சீnhயனிலே