Skip to main content

நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன்


நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்துவீர்

என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத் தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர் - நான்

நல் வாசல்கள் திறந்திட
உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட
கர்த்தனே அருள் செய்வீர் - நான்

உம் நியாயங்கள் நிறைவேற
உம் வேளைக்காக வந்தோம்
தேவனே இராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் - நான்

என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்கிடுவீர்
சமாதானம் அருள்வீர் - நான்

உம் கைகள் எமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம் - நான்