Skip to main content

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா


மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார் - (2)
அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்

மரணம் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லரையோ கட்டி காக்க முடியவில்லையே
யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு (அல்லேலூயா)

அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்
நாள் தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம் (அல்லேலூயா)

கண்ணீரோடு மரியாள் போல அவரை தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கு இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் (அல்லேலூயா)

எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார் (அல்லேலூயா)