Skip to main content

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே


மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

லோகப்பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இவ்வளவாய் அன்பு கூர்ந்தவர்; எம்மில் - மீட்பர்

இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தத்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்குச் சென்று தீர்த்துக் கொள்ளுவேன் - பூவில் - மீட்பர்

தேவனே என்னை ஏன் கை விட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ - அவர் - மீட்பர்

அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப்பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ - பதி - மீட்பர்

பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி; நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் - இப்போ - மீட்பர்

கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
மாயலோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே - என்றும் - மீட்பர்