Skip to main content

மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும் போல் தேவனே


மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுமே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே - மான்கள்

ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அவரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவாய் - மான்கள்

யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறு மலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் - மான்கள்

தேவரீர் பகற் காலத்தில்
கிருபையை தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது - மான்கள்

கன்மலையான தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஒடுங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ - மான்கள்

ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அவரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவாய் - மான்கள்