Skip to main content

மேய்ப்பனின் குரல் கேட்கும் சின்ன ஆட்டுக்குடியாம் நானே


மேய்ப்பனின் குரல் கேட்கும்
சின்ன ஆட்டுக்குடியாம் நானே
அழுகையின் குரல் கேட்டு
என்னை தேடி வந்தார் இயேசுராஜன்

புதரிலே சிக்கொண்டேனே
பயந்து நான் நடுங்கினேனே
அழைத்தார் என்னை அன்றே
அன்பரின் குரல் கேட்டேன் - மேய்ப்

கீழ்ப்படியாமற் ஓர் நாள்
ஓடி ஓடி ஒளிந்தேனே
தேடி வந்து என்னைப் பிடித்தார்
தற்பரன் இயேசு ராஜன் - மேய்ப்

ஓநாய் ஓர் நாள் என்னை
பின் தொடர்ந்து முன் வந்ததே
விலக்க என் கோலுமானார் - என்னை
விடுவிக்கும் தடியுமானார் - மேய்ப்

அன்பரின் குரல் கேட்ட
நல்ல ஆட்டுக்குட்டியாம் நானே
அடங்கி நடப்பேனே
அவர் தோளில் இருப்பேனே - மேய்ப்