Skip to main content

மலைகள் விலகியே பேனாலும் நிலை விட்டு பர்வதம் பெயர்ந்தாலும்


மலைகள் விலகியே பேனாலும்
நிலை விட்டு பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு விலகாதே
என் சமாதானம் நிலைக்குமென்றாரே
வானம் பூமி யாவுமே மாறிடினும்
வானவரின் வாக்குகள் மாறிடாதே
மானிடர்கள் மனம் மாறிடுவார்
மாறிடா யேசுவை நம்பி நிற்போம்

யேகாவா என்னும் நாமமுள்ளவர்
என்னை நோக்கி கூப்பிடு என்றுரைத்தார்
அறியா எட்டா பெருங் காரியங்களை
அறிவிப்பேன் நிச்சயம் என்றுரைத்தார் - வானம்

திகையாதே நானே உந்தன் தேவன்
திக்கற்றோனாய் ஒரு போதும் கைவிடேன்
நீதியின் வலக்கரத்தாலே உன்னை
நித்தமும் தாங்கிடுவேன் என்றனரே - வானம்

என் பிதாவின் நித்திய வீட்டில்
ஏராளம் வாசஸ்தலங்கள் அங்குண்டே
எனக்கோர் ஸ்தலத்தை ஆயத்தமாக்கியே
என்னை சீயோனில் சேர்க்க வந்திடுவார் - வானம்