Skip to main content

உம்மைத்தவிர யாருண்டு கர்த்தாவே அடைக்கலம் கோட்டை கன்மலையும் நீரே


உம்மைத்தவிர யாருண்டு கர்த்தாவே
அடைக்கலம் கோட்டை கன்மலையும் நீரே

நம்பிவந்தவரை வாழவைக்கும் தேவன்
துரத்துண்டவரை சேர்த்துக்கொள்ளும் தேவன்
கிருபையை நம்பி ஓடி வந்தோமையா
கிருபையை அள்ளிப்பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர

பலவீனரையும் பலவானாய் மாற்றும் தேவன்
ஞானமற்றவரை ஞானியாக்கும் தேவன்
கிருபையை நம்பி ஓடி வந்தோமையா
கிருபையை அள்ளிப் பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர

தரித்திரரையும் ஆசீர்வதிக்கும் தேவன்
சுகவீனரையும் ஆரோக்கியமாக்கும் தேவன்
கிருபையை நம் ஓடி வந்தோமையா
கிருபையை அள்ளிப் பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர

இல்லாததையும் உண்டாக்கி விடும் தேவன்
மரித்தோரையும் உயிரோடெப்பும் தேவன்
கிருபையை நம்பி ஓடி வந்தோமையா
கிருபையை அள்ளிப் பொழிந்து விடுமையா - உம்மைத்தவிர