Skip to main content

உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையய்யா


உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சையய்யா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா -2

எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் - 2

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

எபிநேசரே எல் எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணிமுடியாய் சூட்டுகின்றீர்