Skip to main content

உந்தன் சிநேக வாக்குகள் என்றும் மாறிடாததால் என்னை என்றும் வழி நடத்தும் உந்தன் ஜீவ பாதையில்


உந்தன் சிநேக வாக்குகள் என்றும் மாறிடாததால்
என்னை என்றும் வழி நடத்தும் உந்தன் ஜீவ பாதையில்

கோரமாம் பாவி என்னையும் உந்தன் கொல்கொதா வரைக்கும்
கொண்டு சென்றீர் கழுவினீர் எந்தன் பாவ கறை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை - உந்தன்

சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே தண்ணீரும்
இரத்தமாய் வந்ததைக் கண்டேன்
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர் - உந்தன்

திருக்கரம் நீட்டி என்னை அழைத்தீர்
உம் மகா சிநேகத்தை வர்ணிக்கவே
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே - உந்தன்