Skip to main content

உன்னதமானவரின் - உயர்மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவரின் நிழலில் தங்குவான்


உன்னதமானவரின் - உயர்மறைவிலிருக்கிறவன்
சர்வவல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம்
சிறகுகளால் மூடுவார்

தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே - அவர்

இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அன்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவேமாட்டேன்

ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே

தேவன் உன் அடைக்கலமே - ஒரு பொல்லாப்பும் உன்னைச்
சேருமோ
ஒருவாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார்

உன் வழிகளிலெல்hம் - உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்

சிங்கத்தின் மேலும் நடந்து - வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்

ஆபத்திலும் அவரைநான் - நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்