Skip to main content

உன்னைக் காக்கிறவர் உறங்கார் உன் காலைத் தள்ளாட வொட்டார்


உன்னைக் காக்கிறவர் உறங்கார்
உன் காலைத் தள்ளாட வொட்டார்
கவலைகள் தீர்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் - 2

மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்
ஆழிபோல் சோதனை பெருகினாலும்
கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்
நெஞ்சமே நீ கலங்கிடாதே - உன்னை

பாவமும் சாபமும் சூழ்ந்த போது
பாவத்துக்காய் மனம் திருப்பும்போது
பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்
நெஞ்சமே நீ கலங்கிடாதே - உன்னை

சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாகவும் இருக்கும்
கர்த்தரை தேடுவோர்க்குக் குறைவில்லை என்றதால்
நெஞ்சமே நீ கலங்கிடாரே - உன்னை