Skip to main content

உம்பாதம் பணிந்தேன் எந்நாளுமே துதியே உம்மையன்றி யாரைப் பாடுவேன் - ஏசையா


உம்பாதம் பணிந்தேன் எந்நாளுமே துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம்பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம் பாதம்

புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புதுக் கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசை கெட்டேங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர் - உம்பாதம்

என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்

கனி செடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்தீர் - உம் பாதம்

இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம் பாதம்

சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய்ச் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன் - உம் பாதம்