Skip to main content

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே


ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
பல்லவி
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம்மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கமருளுமே

ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாய்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே

பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளுங் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மை என்றும் பிரÞதாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்