Skip to main content

ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே


ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே
யாவரும் தேன்மொழி பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களே
அல்லேலூயா! அல்லேலூயா!
ஏன்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லல் இல்லை! ஆல்லல் இல்லை!
ஆனந்தமாய் பாடிடுவோம்

புதிய புதிய பாடல்களை
புனைந்தே பண்களும் சேருங்களே
துதிகள் நிறைந்த கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களே -2 -அல்

நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களாம்
மிஞ்சும் ஓசைத் தாளங்களால்
மேலும் பரவசம் பாடுங்களே -2 -அல்

எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்த ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களே -2 - அல்