Skip to main content

ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே பள்ளத்தாக்கில் அவர் லீலி


ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கில் அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

வாலிப நாட்களிலே - என்னைப்
படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே - ஆயிரம்

உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியால் மகிழ்ந்திடுவேன் - ஆயிரம்

பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி ஏசுவுக்கு கீழ்ப்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன் - ஆயிரம்

இயேசுவின் நாமத்திலே
ஜெயங்கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ - ஆயிரம்