Skip to main content

ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா


ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா

உந்தன் பாதைகள் அறிந்திடச்செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா

கண்ணின் மணி போல காத்தருளும்
கழுகுபோல சுமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல் தனிலே
எந்நாளும் மூடிக்கொள்ளும்

வெயில் நேரத்தில் குளிர் நிhலே
புயல் காற்றில் புகலிடமே
கடும் மழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே

நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிப்பின் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே

வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்