Skip to main content

ஆளில்லை ஆளில்லை ஆழுது ஜெபிக்க ஆளில்லை


ஆளில்லை ஆளில்லை
ஆழுது ஜெபிக்க ஆளில்லை
செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்
கண்ணீர் சிந்த ஆளில்லை

சின்னஞ்சிறுவரை சித்ரவதை செய்து
வதைக்கும் கூட்டம் உண்டு
கதறித் துடிக்கும் பாலகர்க்காக
கண்ணீர் வடிக்க ஆளில்லை - ஆளில்லை

குடித்து வெறித்து அடித்து உதைக்கும்
கொடூரக் கூட்டம் உண்டு
அழுதே வாழ்வை கழிப்போர்க்காக
அழுது புலம்ப ஆளில்லை - ஆளில்லை

தேவன் வருவார் கணக்கு கேட்பார்
எப்படி ஜெபித்தாய் என்பார்
என்ன சொல்ல எப்படி சொல்ல
தலை குனிவோர் ஏராளம் - ஆளில்லை