Skip to main content

ஆராதிப்போம் ஆண்டவரை ஆவியோடும் உண்மையோடும்


ஆராதிப்போம் ஆண்டவரை
ஆவியோடும் உண்மையோடும்
மாறாத ஆனந்தம் குன்றாத பேரின்பம்
இயேசுவில் என்றும் உண்டு - அல்லேலூயா
நேசரண்டை வாருங்கள்
நேசத்தை ருசியுங்கள்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

ஆகாமியக் கூடாரம் வேண்டாம்
ஆலய வாசற்படியிலே
ஆனந்தம் பாடி நேசரைத் தேடி
ஆண்டவர் பாதம் பணிவோம் - ஆராதிப்போம்

ஆலோசனைக் கர்த்தர் அவரே
ஆலோசனை தந்திடுவாரே
பாதையைக் காட்டி கரம்பிடித்து
நேர்வழி நடத்திடுவார் - ஆராதிப்போம்

ஆட்டுக்குட்டி திருஇரத்தமே
பாவமறக் கழுவிடுமே
சாபங்கள் போக்கி நோய் நீக்கி
விடுதலை தந்திடுமே - ஆராதிப்போம்