Skip to main content

ஆனந்தமே பரமானந்தமே - இயேசு அண்ணலை அண்டினோர்க் கானந்தமே


ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

இந்தப் புவி ஒரு சொந்தமல்ல வென்று;
இயேசு என் நேசர் மொழிந்தனரே;
இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு,
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் - ஆனந்தமே

கர்த்தாவே! நீர் எந்தன் காருண்யக் கோட்டையே
காரணமின்றி கலங்கேனே யான்;
விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவிய சுக்கான் பிடித்திடுமே - ஆனந்தமே

என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்,
கண்ணீர் பள்ளத்தாக்கல்லோ இது,
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம் - ஆனந்தமே

கூடார வாசிகளாகும் நமக்கிங்கு,
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ;
கைவேலையல்லாத வீடொன்ளை மேலே தான்,
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ - ஆனத்தமே

துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை,
தொண்டர் எமை அண்டி வந்திடினும்,
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை,
துன்பத்தினூடே அனுப்பிடுவார் - ஆனந்தமே

இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்;
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேன்;
என் நேசர் தம்முக ஜோதியதேயல்லால்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை - ஆனந்தமே