Skip to main content

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய் இயேசு நமக்களித்த


ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அநுதின ஜீவியத்தில்
பல்லவி
ஆத்துமாவே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே Þதோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே - அல்லேலூயா

கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் - ஆத்துமாவே

படகிலே படுத்து உறங்கினாலும்
கடும்புயல் அடித்த கவிழ்த்தினாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்
காத்தாரே அல்லேலூயா - ஆத்துமாவே

யோர்தானைக் கடந்தோம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம் - ஆத்துமாவே

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார் - ஆத்துமாவே