Skip to main content

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே


ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே

சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
நிலைவரமானவரே - ஆதியும்

ஒரு மனதோடே தேடுவோரை
உண்மையாய் ஏற்றுக்கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போhக்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே - ஆதியும்

தாகமுள்ளோர்க்கு நீரை
தாரளமாயீவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவீயே இன்று ஈவீரே - ஆதியும்

பாவிக்கு பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே - ஆதியும்

சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் எம் மகிமையில் சேர
மன்னவனே அருய் ஈவீரே - ஆதியும்