Skip to main content

ஆச்சரியமே! ஆதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம்


ஆச்சரியமே! ஆதிசயமே
ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம்

செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே - ஆச்சரியமே

ஏழு மடங்கு எரி நெருப்பில்
ஏழை தம் தாசருடன் நடந்தார்
தானியேலை சிங்க கெபியில்
தூதன் துணையால் காத்தனரே - ஆச்சரியமே

பனி மழையை நிறுத்தினாரே
பக்கன் எலியா தன் வாக்கினாலே
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல்லெறிந்தே - ஆச்சரியமே

மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
மாபெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல்லெறிந்தே - ஆச்சரியமே

நம்முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி நம்மை ஆதரிப்பார் - ஆச்சரியமே