Skip to main content

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ - ஆ.


சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ - ஆ.
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்.

பாவ பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்ததென் ஜீவியமே- ஆ ஆ
சிலுவையண்டைவந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம் - சிலுவை

எவ்விதக் கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவைச் சார்ந்து நிற்பேன்- ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் - சிலுவை

இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டு என்
இன்னல் மறந்திடுவேன் - ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக் கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் - சிலுவை