Skip to main content

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் அன்பருடன் வாழ்வேன்


சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
அன்பருடன் வாழ்வேன்
ஜெயகீதம் பேரின்பம்
துதி பாடி மகிழுவேன்

நகரத்தின் வீதிகள்
பொன்னாக மின்னுதே
இராப் பகல் இல்லையே - என்
இரட்சகர் வெளிச்சமே

என் கண்ணீர் யாவையும்
கரத்தால் துடைப்பாரே
சஞ்சலமில்லையே - என்
நேசர் மகிழ்ச்சியே

மண் சாயல் மாறியே
விண் சாயல் அணிந்துமே
மறுரூபம் அடைவேனே - என்
இயேசுபோல் மாறுவேன்

நிதமும் என் நேசரை
துதிபாடி போற்றுவேன்
மகிபனின் தேசத்தில் - நான்
மகிமையாய் வாழுவேன்