Skip to main content

சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் சேனாபதியாய் என் முன்னே செல்கின்றார்


சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கின்றார்
சேனாபதியாய் என் முன்னே செல்கின்றார்

கர்த்தரின் கிருபைகளை என்றென்றும்
கர்த்தர் துதி என் வாயில் என்றென்றிருக்குமே - சேனை

கர்த்தாதி கர்த்தரை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தருக்குள் என் ஆத்துமா நித்தம் மேன்மை பாராட்டும் - சேனை

கர்த்தரே என் பெலனாம், கீர்த்தனம் பண்ணிடுவேன்
கர்த்தர் உயர்ந்த அடைக்கலமும் வழிகாட்டும் நட்சத்திரமாம் - சேனை

கர்த்தரே பெரியவர் துதிக்குப் பாத்திரர்
கனமும் மகிமையும் திரியேக தேவனுக்கே