Skip to main content

சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மைக் காப்பவரே


சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மைக் காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிடத் தந்தருள்வார்
எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்

காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனாலும் மரணமானாலும் நம்
தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்

ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்