Skip to main content

சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையுமே


சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு - அதை
அறிந்தே அகமகிழ்வோம்
ஜெய கிறிÞது முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக் கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமதிதிற்கே

தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகின்றார்
என்றும் வாக்கு மாறிடாரே - ஜெய

மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் - ஜெய

சத்துருவின் கோட்டை தகர்ந் தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே - துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் - ஜெய

கறை, திறை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் - ஜெய